சத்தி புலிகள் காப்பகத்தில் மீண்டும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
சத்தி புலிகள் காப்பகத்தில் மீண்டும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி என 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் 6 நாட்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் 3 நாட்கள் பகுதிவாரி கணக்கெடுப்பும், 3 நாட்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெறும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றபோது கல்லாம்பாளையம் என்ற இடத்தில் யானை தாக்கியதில் வனக்காவலர் மற்றும் சமூக ஆர்வலர் என 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. தற்போது சமூக ஆர்வலர்கள் இல்லாமல் 5 பேர் கொண்ட வனஊழியர்களை கொண்டு நேற்று 10 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கியது.
Related Tags :
Next Story