ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வரை புறா பந்தயம்


ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வரை  புறா பந்தயம்
x
தினத்தந்தி 6 March 2021 12:01 PM GMT (Updated: 6 March 2021 12:01 PM GMT)

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வரை புறா பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஹார்பர் ரேசிங் புறா கிளப் சார்பில் ஆந்திர மாநிலம் காவாலி முதல் தூத்துக்குடி வரையிலான புறா பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 25 புறாக்கள் பங்கேற்றன.

போட்டியின் முடிவில், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சைமன் என்பவரது புறா முதலிடத்தை பிடித்தது. நாடார் தெருவை சேர்ந்த டைகர்வினோத் புறா 2-வது இடத்தையும், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெயபாலாஜி புறா 3-வது இடத்தையும் பிடித்தது. 

போட்டிகளில் வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு கிளப் தலைவர் டைகர்வினோத், செயலாளர் அந்தோணி ஆனந்த், பொருளாளர் சாவியோ ஆகியோர் பரிசு வழங்கினர். 

Next Story