மோட்டார் ஒயர் திருடியவருக்கு சிறை தண்டனை


மோட்டார் ஒயர் திருடியவருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 6 March 2021 9:24 PM GMT (Updated: 6 March 2021 9:24 PM GMT)

நெல்லை அருகே மோட்டார் ஒயர் திருடியவருக்கு கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது.

நெல்லை, மார்ச்:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த குறவர்குளத்தில் தங்கதுரை என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்ளது. இங்குள்ள மோட்டார் ஒயர்களை கீழஓமநல்லூரை சேர்ந்த ஞானசந்திரன் (வயது 46) என்பவர் திருடி உள்ளார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசந்திரனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி விஜயலட்சுமி வழக்கை விசாரித்து ஞானசந்திரனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் பாரதி செல்வி ஆஜரானார்.

Next Story