இட ஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இட ஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம்
ராமேசுவரம் முத்துராமலிங்கதேவர் நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்பு நேற்று ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்தும், இட ஒதுக்கீடு உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போஸ், நாகரத்தினம், செல்லச்சாமி உள்ளிட்ட ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story