சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது


சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2021 6:16 PM GMT (Updated: 8 March 2021 6:16 PM GMT)

சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

நொய்யல்
வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார் தளவாபாளையம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் பகுதியில் நேற்று காலை  வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி வாகன சோதனை செய்தனர். இதில், காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரவி (வயது 40), அதே பகுதியை சேர்ந்த ராஜராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, மணலுடன் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story