தோழிகளுடன் விளையாடியபோது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பலி


தோழிகளுடன் விளையாடியபோது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பலி
x
தினத்தந்தி 9 March 2021 4:07 AM GMT (Updated: 9 March 2021 4:07 AM GMT)

தோழிகளுடன் சேர்ந்து விளையாடியபோது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பலியானார்.

7-ம் வகுப்பு மாணவி

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவர்களுடைய 12 வயது மகளான அக்ஷயா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அக்ஷயா, தனது வீட்டின் மொட்டை மாடியில் சக தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தார்.

4-வது மாடியில் இருந்து விழுந்து பலி

அப்போது அக்ஷயா, 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலை, கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் மாணவி அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்ஷயா, விளையாடும் போது கவனக்குறைவாக தவறி விழுந்தாரா? அல்லது விளையாட்டின்போது சக தோழிகள் யாராவது அரை தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 


Next Story