மரத்தில் கார் மோதி பெண் சாவு


மரத்தில் கார் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 9 March 2021 6:46 PM GMT (Updated: 9 March 2021 6:49 PM GMT)

உடையார்பாளையம் அருகே மரத்தில் கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(வயது 45). மருந்தாளுனரான இவர் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தகத்தில் ேவலை பார்த்து வருகிறார். இவர், தனது தந்தை பழனிச்சாமி(75), பெரியம்மாள் பரஞ்ஜோதி(68), தாய் மரகதம் (65), மகள் தமிழினி (10) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை ஒரு காரில் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து மதியம் குடும்பத்துடன் காரில் சொந்த ஊரான பிளாக்குறிச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சிவா ஓட்டினார். வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தில் தா.பழூர்- உடையார்பாளையம் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள பனைமரத்தில் மோதியது.

சாவு

இதில் சிவாவின் தாய் மரகதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story