வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 15 March 2021 8:20 PM GMT (Updated: 15 March 2021 8:20 PM GMT)

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

பெரம்பலூர்:
2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 53 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நேற்று மூடப்பட்டிருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தில் 350 வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story