மத்தூர் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மத்தூர் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2021 7:09 PM GMT (Updated: 18 March 2021 7:10 PM GMT)

மத்தூர் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

மத்தூர், 

மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளி பக்கமுள்ளது புலிகுண்டா. இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக செல்வம் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story