இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2021 8:18 PM GMT (Updated: 18 March 2021 8:18 PM GMT)

அன்னூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அன்னூர்

கோவை வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். 

இவருடைய மனைவி சசிகலா தேவி (28). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

 சசிகலாதேவி, அன்னூர் ஆலப்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பிரவீன்குமார் ஒடிசாவில் இருந்து வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்தார். 

பின்னர் அவர் வெளியூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் 1½ வருடம் கழித்து வந்த நிலையில் தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்று பிரவீன்குமாரிடம் சசிகலாதேவி கேட்டுள்ளார். 

இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சசிகலா தேவி, சம்பவத்தன்று மண்எண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்து கொண்டார். 

உடனே அவரை பெற்றோர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சசிகலாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story