வாகன சோதனை தீவிரம்
சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
பனைக்குளம்,
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தேவிப்பட்டினம் திருச்சி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பட்டணம்காத்தான் செக்போஸ்ட் வழியாக செல்லும் சுற்றுலா வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் கடுமையான சோதனைக்குபின் அனுப்பப்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து பணப்பெட்டி களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதுபோல் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, செல்லக்கூடிய நதிப் பாலம் சாலை உள்ளிட்ட இடங்களிலும் துணை ராணுவ பாதுகாப்புடன் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆலோசனையின்படி போலீசார் சுழற்சிமுறையில் ரோந்து சுற்றி நள்ளிரவில் வரும் வாகனங்களில் துருவிதுருவி விசாரித்து சோதனை செய்த பின்னரே வாகனங்களை அனுப்பி வருகின்றனர்.
Related Tags :
Next Story