பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2021 9:36 PM GMT (Updated: 21 March 2021 9:36 PM GMT)

ஆலங்குளத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குளம், மார்ச்.22-
ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் செல்லமணி மனைவி சொர்ணம் (வயது 55). கணவன் இறந்துவிட்டதால் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர் குடும்ப செலவுக்காக வீடுகள் தோறும் வார வட்டி விடும் நபர்களிடமும், சுய உதவிக் குழுக்களிடமும் கடனாக பணம் வாங்கியுள்ளார். கடன் தொல்லை அதிகரித்ததால் மனமுடைந்த சொர்ணம் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story