பொதுக்குழு கூட்டம்


பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 27 March 2021 7:52 PM GMT (Updated: 27 March 2021 7:52 PM GMT)

பாபநாசத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழில்நுட்ப பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழில் நுட்ப பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் செபஸ்டின் முன்னிலை வகித்தார். ஷெரீப் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேரவை தலைவர் குமாரவேல், பொருளாளர் இளங்கோ, மண்டல பொது செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்திட போக்குவரத்து கழகங்கள் அரசு துறையாக மாற்றப்பட்டு தொழில்நுட்பபணியாளர்களின் கல்வி தகுதி அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும். தரமான உதிரிபாகங்கள், வேலைபளுவை குறைப்பதற்கு நவீன கருவிகள், அனைத்து பணிமனைகளிலும் தரமான சிமெண்ட் தளம், வேலை செய்வதற்கு செட் போன்றவைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மனோகரன், சாகுல்ஹமீது உள்பட தொழில் நூட்ப பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மண்டல பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story