அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 10:21 PM GMT (Updated: 28 March 2021 10:21 PM GMT)

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில், மார்ச்:
சங்கரன்கோவிலில் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக முதல்-அமைச்சரையும், அவரது தாயாரையும் பற்றி தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ராசா பேசியதைகண்டித்து நடந்த இ்ந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி துணை செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் முத்துமணி மற்றும் மகளிர் அணியினர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story