குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 March 2021 2:11 AM GMT (Updated: 30 March 2021 2:11 AM GMT)

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லகுமம்மா (வயது 31). சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லகுமம்மா  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story