கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது


கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது
x
தினத்தந்தி 31 March 2021 6:50 PM GMT (Updated: 31 March 2021 6:50 PM GMT)

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது

புதுக்கோட்டை, ஏப்.1-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 95 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50-க்குள் இருந்தது. தற்போது 100-ஐ நெருங்குகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

Next Story