சீனாபுரம் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 2 April 2021 9:28 PM GMT (Updated: 2 April 2021 9:28 PM GMT)

சீனாபுரம் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.

பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது. 
மாட்டுச்சந்தை
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு, சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் இன பசு மாடுகள் 50-ம், அதன் இன கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 75-ம், அதன் இன கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
வியாபாரிகள் வருகை
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை கெடுபிடி காரணமாக சீனாபுரம் சந்தையில், மாடுகளை வாங்க லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து வர வியாபாரிகளால் முடியவில்லை. 
இதன் காரணமாக, நேற்று கூடிய சீனாபுரம் மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், மாடுகளின் விற்பனையும் மந்தமாக இருந்தது. 
ரூ.40 லட்சம்
விர்ஜின் இன பசு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. 
இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.9 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மாடுகள் மொத்தம் ரூ.40 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். 
பெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை, குன்னத்தூர், திங்களூர், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், அறச்சலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி வாங்கி சென்றனர்.

Next Story