புதிய கலெக்டர் பொறுப்பேற்பு


புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 2 April 2021 9:33 PM GMT (Updated: 2 April 2021 9:33 PM GMT)

புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்

கரூர்
கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராகவும், அப்பொறுப்பில் இருந்த பிரசாந்த் மு. வடநேரே கரூர் மாவட்ட கலெக்டராகவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் மு.வடநேரே நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்கனவே கலெக்டராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story