மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 9:36 PM GMT (Updated: 2 April 2021 9:36 PM GMT)

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நச்சலூர்
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது கோட்டையார் தோட்டம் பாலக்கட்டை பகுதியில் மதுவிற்ற பொய்யாமணி பகுதியை சேர்ந்த மணி (வயது 50) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ராசு (45) என்பவரும் மது விற்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story