நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 12,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,611 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 11 ஆயிரத்து 913 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 187 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனாவுக்கு 111 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
=======
Related Tags :
Next Story