தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்


தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 5 April 2021 6:28 AM GMT (Updated: 5 April 2021 6:28 AM GMT)

தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்.

திருவள்ளூர், 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாநில தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் அலோக் வர்தன் (ஓய்வு), மற்றும் மாநில தேர்தல் சிறப்பு பார்வையாளர் தர்மேந்திர குமார் (ஓய்வு) ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் பொது பார்வையாளர்கள், அனைத்து தேர்தல் செலவின பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story