2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள்
7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்,
7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
வாக்குச்சாவடி
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 1,292 எந்திரங்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு 1,359 எந்திரங்களும், சாத்தூர் தொகுதிக்கு 1,774 எந்திரங்களும், சிவகாசி தொகுதிக்கு 1,859 எந்திரங்களும், விருதுநகர் தொகுதிக்கு 1644 எந்திரங்களும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு 1,572 எந்திரங்களும், திருச்சுழி தொகுதிக்கு 1,608 எந்திரங்களும் ஆக மொத்தம் 7 தொகுதிகளுக்கும் 11,108 எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு எந்திரம்
இதில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், மற்றும் வாக்குபதிவு கர ஒப்புகை தெரிவிக்கும் எந்திரம் ஆகியவை அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story