கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை


சோதனை
x
சோதனை
தினத்தந்தி 6 April 2021 5:24 AM GMT (Updated: 6 April 2021 5:24 AM GMT)

கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை

கணபதி

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் வீடு கணபதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து 8.30 மணிவரை அவருடைய வீட்டில்  தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது குறித்து கணபதி ராஜ்குமார் கூறுகையில், தேர்தலுக்காக நடத்தப்படும் சோதனை இது.என்னிடம் இருந்து எந்தவொரு ரொக்கமோ, ஆவணமோ எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்றார். 

இந்த சோதனை நடந்த போது தி.மு.க.வினர் திரளாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story