5 பேர் கைது


5 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2021 7:50 PM GMT (Updated: 6 April 2021 7:50 PM GMT)

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கருவாட்டு பேட்டை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு எம்.புதுப்பட்டி குப்பணாபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 38) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு பொன்னுச்சாமி (51) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்வகுமார் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் சானார்பட்டி விலக்கு பகுதியில் ரோந்துபணியில் ஈடு பட்ட போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த எம்.புதுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முத்துராஜ் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு பெட்டி கடை நடத்தி வருரும் மாரியப்பன் (56) என்பவர் தனது பெட்டி கடையில் 7 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story