தர்மபுரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 7 April 2021 7:08 PM GMT (Updated: 7 April 2021 7:19 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க  தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Next Story