தென்காசியில் 21 பேருக்கு கொரோனா


தென்காசியில் 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 8:02 PM GMT (Updated: 7 April 2021 8:02 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்து ஓட்டு போடுவதற்காக சங்கரன்கோவில் பகுதிக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. 8 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றும் ஆஸ்பத்திரிகளில் இருந்து 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 198 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 161 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story