சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி- 90 பேருக்கு தொற்று


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி- 90 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 7 April 2021 10:04 PM GMT (Updated: 7 April 2021 10:04 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
 நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 67 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 90 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 43 பேர், சங்ககிரியில் 10 பேர், நங்கவள்ளி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், ஆத்தூர், தலைவாசல், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, ஓமலூர், மேச்சேரி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மகுடஞ்சாவடி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஒருவர் பலி
நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 419 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சேலத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

Next Story