ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ48 லட்சம் வசூல்


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ48 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 8 April 2021 3:48 PM GMT (Updated: 8 April 2021 3:48 PM GMT)

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.48 லட்சம் வசூலாக கிடைத்தது.

பொள்ளாச்சி

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.48 லட்சம் வசூலாக கிடைத்தது. 

மாசாணியம்மன் கோவில்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். 

அமாவாசை தினங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி காணிக்கை செலுத்துகின்றனர். 

இதற்காக கோவில் வளாகத்தில் தட்டு காணிக்கை மற்றும் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்களை மாதந்தோறும் திறந்து எண்ணுவது வழக்கம்.

உண்டியல் எண்ணும் பணி

அதன்படி கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி, கோவில் உதவி ஆணையர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. 

இந்த பணியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வளாகத்தில் இருந்த 9 தட்டு காணிக்கை உண்டியல்கள் மற்றும் 22 நிரந்தர உண்டியல்கள் எண்ணப்பட்டன. 

தட்டு காணிக்கை மூலம் ரூ.6 லட்சத்து 19 ஆயிரத்து 336, நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.41 லட்சத்து 81 ஆயிரத்து 85 சேர்த்து மொத்தம் ரூ.48 லட்சத்து 421 வசூலாக கிடைத்தது. 

இதை தவிர 238 கிராம் தங்கம், 322 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தன.


Next Story