டெய்லர் சாவு


டெய்லர் சாவு
x

டெய்லர் திடிரென பரிதாபமாக இறந்தார்.

கரூர்
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி பகுதிக்குட்பட்ட வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 61). இவர் கரூர் தெரசா கார்னர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென ராமச்சந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ராமச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு ராமச்சந்திரனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story