கார் மோதி விவசாயி சாவு


கார் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 8 April 2021 8:13 PM GMT (Updated: 8 April 2021 8:13 PM GMT)

சோழவந்தான் அருகே கார் மோதியதில் விவசாயி இறந்தார்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே போலக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருவராஜ்(வயது 56)விவசாயி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது மனைவி கொடியம்மாளுடன் விக்கிரமங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த  கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருவராஜ் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கொடியம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செக்கானூரணியை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.

Related Tags :
Next Story