பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 90 அடியை தாண்டியது


பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 90 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 9 April 2021 10:48 PM GMT (Updated: 9 April 2021 10:48 PM GMT)

பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 90 அடியை தாண்டியது.

பவானிசாகர்
பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 90 அடியை தாண்டியது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
90 அடியை தாண்டியது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 90 அடியை எட்டியது. அதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து 90 அடியாக நீடித்து வந்தது. கடந்த 5-ந் தேதி அணை நீர்மட்டம் 90 அடியில் இருந்து குறைய தொடங்கியது. அன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 89.93 அடியாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி காலை 6 மணி முதல் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை தாண்டியது. அணையின் நீர்மட்டம் 90.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 263 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

Next Story