மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2021 7:21 PM GMT (Updated: 10 April 2021 7:21 PM GMT)

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பெரிய திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பெரிய திருக்கோணம் தெற்கு தெருவை சேர்ந்த அரிச்சந்திரன்(வயது 51) மற்றும் சாமிநாதன் (70) ஆகியோருடைய வீடுகளில் சோதனை செய்தனர். இதில் அவர்களுடைய வீடுகளின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிச்சந்திரன், சாமிநாதன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story