ராசிபுரம் அருகே ஊழியருக்கு கொரோனா தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடல்


ராசிபுரம் அருகே ஊழியருக்கு கொரோனா தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடல்
x
தினத்தந்தி 12 April 2021 9:13 PM GMT (Updated: 12 April 2021 9:13 PM GMT)

ராசிபுரம் அருகே ஊழியருக்கு கொரோனா தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடல்

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கேரளாவை சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். கேரளா சென்று வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. வங்கியில் அவரையும் சேர்த்து 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இதையொட்டி நேற்று முதல் அந்த வங்கி மூடப்பட்டது.
=====

Next Story