திருக்கோவிலூர் ரிஷிவந்தியம் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


திருக்கோவிலூர் ரிஷிவந்தியம் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 April 2021 4:30 PM GMT (Updated: 13 April 2021 4:30 PM GMT)

திருக்கோவிலூர் ரிஷிவந்தியம் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், மளிகை வியாபாரிகள் சங்கம் மற்றும் ஜி அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் தொழிலதிபரும், நெல் வியாபாரிகள் சங்க தலைவருமான முருகன், வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் ஜி அரியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட சுமார் 150 பேருக்கு தடுப்பூசி போட்டனர். 

இதில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், வெங்கடேஷ், பூபதி, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பாராட்டினர்.

ரிஷிவந்தியம்

அதேபோல் ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலகம் சார்பில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் ரிஷிவந்தியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மருத்துவர் வசந்தபிரியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் தெய்வீகன் வரவேற்றார். 

தொடர்ந்து நடைபெற்ற முகாமில் பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர் என 76 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல் மணலூர்பேட்டையில் டாக்டர் வேல்விழி தலைமையில் நடைபெற்ற முகாமில் 72 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர் பழனிவேல், மருந்தாளுனர் ஞானவேல், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் சேகர், செவிலியர் வாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story