சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 April 2021 10:55 PM GMT (Updated: 15 April 2021 11:06 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புஞ்சைபுளியம்பட்டி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பரம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 50). திருமணம் ஆகாதவர். இவர் ஊர் ஊராக சென்று சோப்பு பவுடர் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை புஞ்சைபுளியம்பட்டி அருகே ஒரு வீட்டிற்கு சென்ற முத்துக்குமார் அங்கிருந்த சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். 

சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, அவருக்கு முத்துக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து முத்துக்குமாரை பிடித்தார்கள். பின்னர் அவரை புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். போலீசார் விசாரணை நடத்தி முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். 

Next Story