கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்


கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 18 April 2021 3:31 AM GMT (Updated: 18 April 2021 3:45 AM GMT)

கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோத்தகிரி,

கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூடத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவகுமார் தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் குமாரசாமி, சுதாகர், ராஜ்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். 

இந்த முகாமில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோன்று கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் நடைபெற்ற முகாமில் 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் அரவேனு, கொணவக்கரை, நெடுகுளா, கோத்தகிரி அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால், மருந்துகள் தீர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story