நடிகர் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி


நடிகர் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி
x
தினத்தந்தி 18 April 2021 7:18 PM GMT (Updated: 18 April 2021 7:18 PM GMT)

நடிகர் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்

வாடிப்பட்டி
நடிகர் விவேக் மறைவையொட்டி வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு அனைத்துக்கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறதமிழர்சேனை மாநில துணை பொதுசெயலாளர் ஆதிமுத்து குமார் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் பாலாஜி முன்னிலை வகித்தார். பசுமை காவலர் டாக்டர் அசோக்குமார் வரவேற்றார். யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா மரக்கன்றுகளை வழங்கினார். இதில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் செல்வக்குமார், தி.மு.க. ராஜேந்திரன், வினோத், கொரியர் சிவா, தே.மு.தி.க. மாரியப்பன், பா.ஜ.க. முரளி ராமசாமி, நாம் தமிழர் மகேந்திரன், இருளப்பன், விடுதலைச்சிறுத்தைகள் ஈஸ்வரன், யுவராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டூர்சாமி நன்றி கூறினார்.
நடிகர் விவேக் மரணமடைந்ததை தொடர்ந்து அவர் நினைவாகவும், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடரும் வகையிலும் துவரிமானில் ஈர நிலம் நண்பர்கள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Next Story