முக கவசம் இல்லாத பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி மறுப்பு


முக கவசம் இல்லாத பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 18 April 2021 9:52 PM GMT (Updated: 18 April 2021 9:52 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் இல்லாத பயணிகளுக்கு பஸ்சில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
கொரோனா பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு அதிகாரிகள் கொரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் போக்குவரத்து துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கியது. ஆதலால் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளை நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பஸ்சில் ஏற்ற மறுத்தனர். இதையடுத்து அருகே உள்ள கடைகளுக்கு சென்று பயணிகள் முக கவசம் வாங்கி வந்தனர். பின்னர் அவர்கள் பஸ்சில் ஏற அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story