தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் செந்தில்ராஜ் வலியுறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் செந்தில்ராஜ் வலியுறுத்தல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள வீடுகள் தூய்மைபடுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்தும், கொரோனா பரிசோதனை செய்வதும் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகள்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அனைத்து தரப்பினரும் கடைபிடிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு 3-க்கும் மேல் உள்ள தெருக்களை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு முன்பு பீளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். தினசரி நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிக அளவில் நடத்திட வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினசரி குறைந்தது 15 இடங்களில் முகாம் நடத்த வேண்டும். கொரோனா பரிசோதனைகள் தினசரி 2 ஆயிரத்து 500 பேருக்கு மேல் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று மேலும் கூடுதலான பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்து..
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளையும் கண்காணிக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் பகுதிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேணடும். கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் முககவசம் அவசியம் அணிதல், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனபிரியா, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, பொது சுகாதார இணை இயக்குநர் முருகவேல், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா, அனிதா, மாநகர நல அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story