கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 April 2021 9:05 PM GMT (Updated: 19 April 2021 9:05 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

கொட்டாம்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டிக்கு வந்துவிட்டு பள்ளப்பட்டி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். சின்னக்கொட்டாம்பட்டி விலக்கு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் விபத்து தொடர்பாக கார் டிரைவர் லீலாசங்கர்(36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story