மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 9:10 PM GMT (Updated: 21 April 2021 9:10 PM GMT)

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் அம்பாபூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவல் படி அம்பாபூர் வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின்(வயது 30) வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story