சமூக வலைதளங்களில் அவதூறு; 2 பேர் மீது வழக்கு


சமூக வலைதளங்களில் அவதூறு; 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 April 2021 7:27 PM GMT (Updated: 29 April 2021 7:27 PM GMT)

நெல்லை அருகே சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, ஏப்:
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, இருதரப்பைச் சேர்ந்த மர்மநபர்கள் 2 பேர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சீவலப்பேரி போலீசார் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய மர்மநபர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சமூக வலைதளங்களில் சமூக பிரச்சினையை தூண்டும் விதமாக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

Next Story