விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 April 2021 6:14 PM GMT (Updated: 30 April 2021 6:14 PM GMT)

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல்
வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் வல்லபைகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூக்கள் மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் புகழிமலை கணபதி கோவில், ஈ.ஐ.டி.
விநாயகர் கோவில், வேலாயுதம்பாளையம் செல்வ விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல் கரைப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நொய்யல், அத்திப்பாளையம், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இதேபோல் லாலாபேட்டை அருகே மேல வீட்டு கேட்டில் அமைந்துள்ள மகாகணபதி கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story