பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்; மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை


பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்; மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 10:37 PM GMT (Updated: 30 April 2021 10:37 PM GMT)

பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அம்மாப்பேட்டை
அம்மாபேட்டை அருகே பூதப்பாடி அடுத்துள்ள எஸ்.பி.கவுண்டனூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ரோட்டோரத்தில் ஒரு மின் கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதி சிமெண்ட் காரை பெயர்ந்து கம்பி வெளியே தெரியும்படி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த மின் கம்பத்தில் இருந்து வரும் மின் விளக்கின் வெளிச்சத்தில் தான் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள சிறுவர்-சிறுமிகள் விளையாடி வருகின்றனர். மேலும் காற்று காலங்களில் மின் கம்பம் அசைந்து ஆடி வருவதால் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story