200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் 200 பேர் கோவிட் -19 இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்..
இதில் புதுவயல் வட்டார மருத்துவ அலுவலர் பிரியங்கா, பிருந்தா, சுஜிர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வரத்தினம் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக டாக்டர் ஆனந்தி முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
Related Tags :
Next Story