200 பேருக்கு கொரோனா தடுப்பூசி


200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 May 2021 6:26 PM GMT (Updated: 1 May 2021 6:26 PM GMT)

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுகாதார மையம் மற்றும் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகியவை இணைந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு இரண்டாம் தவணை கோவிட் -19 தடுப்பூசி போடும் முகாம் பல்கலைக்கழக சுகாதார மையத்தில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் 200 பேர் கோவிட் -19 இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்..
இதில் புதுவயல் வட்டார மருத்துவ அலுவலர் பிரியங்கா, பிருந்தா, சுஜிர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வரத்தினம் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக டாக்டர் ஆனந்தி முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Next Story