வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது


வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 6:49 PM GMT (Updated: 1 May 2021 6:49 PM GMT)

தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் ைகது செய்தனர்.

தாயில்பட்டி, 
வீட்டில் யாரேனும் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்து விற்பனை செய்கிறார்களா என  வெம்பக்கோட்டை போலீசார் ேசாதனை செய்தனர். அப்போது தாயில்பட்டி ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் ராமர் (வயது37) என்பவர் வீட்டில் சோதனை செய்த போது அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்த ேபாலீசார், ராமரை கைது செய்தனர்.


Next Story