முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரெயில் பயணிகள் தவிப்பு
முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரெயில் பயணிகள் தவித்தனர்.
ஈரோடு
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில்கள் மூலமாக வந்த பயணிகள் தங்களது பகுதிகளுக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் பலர் ரெயில் நிலைய பஸ் நிறுத்த பகுதியில் தவித்தார்கள். ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படவில்லை. மேலும், டவுன் பஸ்களும் ஓடவில்லை. இதனால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story