மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2021 6:37 PM GMT (Updated: 3 May 2021 6:37 PM GMT)

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நொய்யல்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையிலான போலீசார்  அந்த வீட்டில் சோதனையிட்டனர். தளவாபாளையம் கடை வீதியை சேர்ந்த முருகையன் (வயது 38), அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story