கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ முகாம்


கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 3 May 2021 6:42 PM GMT (Updated: 3 May 2021 6:42 PM GMT)

கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

நொய்யல்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிபாளையத்தில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சத்தியேந்திரன் தலைமையில் கிராம சுகாதார செவிலியர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் வீரமணி மற்றும் லேப் டெக்னீசியன், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story