தர்மபுரி மாவட்டத்தில் புதியதாக 171 பேருக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,273 ஆக அதிகரிப்பு


தர்மபுரி மாவட்டத்தில் புதியதாக 171 பேருக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,273 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 7:25 PM GMT (Updated: 3 May 2021 7:29 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 171 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,273 ஆக அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புள்ளவர்கள் முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 171 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1273 பேராக அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,253 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 151 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 171 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,273 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 67 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Next Story